ஜோதிடமும், ஜாதகமும் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், பல வகையிலும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர்களாக உள்ள ஆணையும், பெண்ணையுமே, திருமண பந்தத்தில் இணைக்க விரும்பினர். இதற்காக, அவர்கள் இருவரிடையே, உடல், மனம், உணர்வு என அனைத்து நிலைகளிலும் நிலவும் ஒற்றுமையைக் கண்டறிய, நமது பழமையான வேத ஜோதிடத்தின் துணையை நாடினர். ஜோதிட சாஸ்திரம் என்பது, நடைமுறையில், ஜாதகம் என்பதன் அடிப்படையில் இயங்குகிறது. ஒருவர் இவ்வுலகில் பிறக்கும் தருணத்தில், அந்த இடத்தில், வான் வெளியில் நிலவும் கிரகங்களின் அமைப்பை, ஒருவரது ஜாதகம் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு உள்ள கிரகங்களின் அமைப்பும், பிறகு ஏற்படும் அவற்றின் இயக்கங்களும், ஒருவரது வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், அவர் அனுபவிக்க இருக்கும் சுக, துக்கங்களையும் நிர்ணயிக்கின்றன என்பது, ஜோதிடக் கலையின் அடிப்படை விதியாகும். எனவே, ஒருவரது ஜாதகத்தை ஆராய்வதன் மூலம், அவரது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ள இயலும் என்பது, பல்லாண்டு கால அனுபவங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும். திருமணத்திற்குத் தகுதியான ஒரு ஆண், பெண் இரு...
Comments
Post a Comment