Posts

Showing posts from June, 2021

ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது

Image
  ஜாதக கட்டம் - பொதுப் பலன்கள் : ஒரு ஜாதகத்தில் இருக்கும் பன்னிரண்டு கட்டங்கள் மற்றும் அதில் அமைந்திருக்கும் கிரகங்களின் நிலையை வைத்துப் பொதுவான பலன்களைக் கூற முடியும் . கிரகங்கள் எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் இயல்பு கொண்டது . ஒரு குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலை , அந்த குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த போது  கிரகங்கள் அமைந்த நிலையை குறிப்பிடும் . இதைக் கொண்டு  அந்த நபரின் பொதுவான பலன்களைக் கூற இயலும் . ஆனால் வாழ்வில் நடக்கும் சில நல்ல விஷயங்கள்  அதாவது மேற்படிப்பு ,   வெளிநாடு சென்று படித்தல் ,   வேலை வாய்ப்பு ,   திருமணம் ,   புத்திரப் பேறு போன்றவை எப்போது நடக்கும் என்பதை அறிய இன்னும் சில விஷயங்கள் தேவை .   ஏனெனில் பிறந்த போது கோள்கள் அமைந்து இருக்கும் நிலை மட்டுமன்றி தினமும் கோள்கள் இயங்கிக் கொண்டிருக்கும் அதிர்வினால் ஏற்படும் தாக்கங்களும் ஒரு ஜாதகரின் வாழ்வில் முக்கியப் பங்கை வகிக்கும் . மேலும் பிறந்த போது ஒருவரின் ஜாதகத்தில் காணப்படும் தசையும் மாறிக் கொண்டே இருக்கும் . இவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் . ஜாதக கட்டம் - கோட்சாரம் ஒருவரின்

வாக்கிய முறை, திருக்கணித முறை இவற்றில் ஜாதகம் கணிக்க மிகச் சரியான முறை எது

Image
ஜோதிடமும், ஜாதகமும் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், பல வகையிலும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர்களாக உள்ள ஆணையும், பெண்ணையுமே, திருமண பந்தத்தில் இணைக்க விரும்பினர். இதற்காக, அவர்கள் இருவரிடையே, உடல், மனம், உணர்வு என அனைத்து நிலைகளிலும் நிலவும் ஒற்றுமையைக் கண்டறிய, நமது பழமையான வேத ஜோதிடத்தின் துணையை நாடினர். ஜோதிட சாஸ்திரம் என்பது, நடைமுறையில், ஜாதகம் என்பதன் அடிப்படையில் இயங்குகிறது. ஒருவர் இவ்வுலகில் பிறக்கும் தருணத்தில், அந்த இடத்தில், வான் வெளியில் நிலவும் கிரகங்களின் அமைப்பை, ஒருவரது ஜாதகம் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு உள்ள கிரகங்களின் அமைப்பும், பிறகு ஏற்படும் அவற்றின் இயக்கங்களும், ஒருவரது வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், அவர் அனுபவிக்க இருக்கும் சுக, துக்கங்களையும் நிர்ணயிக்கின்றன என்பது, ஜோதிடக் கலையின் அடிப்படை விதியாகும். எனவே, ஒருவரது ஜாதகத்தை ஆராய்வதன் மூலம், அவரது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ள இயலும் என்பது, பல்லாண்டு கால அனுபவங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும். திருமணத்திற்குத் தகுதியான ஒரு ஆண், பெண் இரு